Thursday, 14 March 2013

kavithai


           மழையில் MCC

கார்காலையில் கதிரவனை முந்திக்கொண்டு
அவசர அவசரமாக கல்லூரிக்குள் நுழைந்த
என்னை வரவேற்க காத்திருந்தது
மழையில் சொட்ட சொட்ட நனைந்த மரங்கள்..!
கால்களின் வேகத்தை நீர்த்த வேர்களினால் பற்றிக்கொண்டு
சில்லென்று தென்றலை வீசிக்கொண்டு
பறவைகளின் கதகதப்பில் கூடுகளை தாங்கிக்கொண்டு
குளுமையான  குகைகளை கிளைகளினால்
ஆகாயத்தின் கீழ் கட்டிக்கொண்டு
கருமேங்களை தொட உயர்ந்த மரங்கள்
அசைந்து அசைந்து  போட்டிப் போட்டுக்கொண்டு
பனியில் நனைந்த மொட்டுகளை மலரச்செய்து
அதனை மலரவிடாமல் தூரல்கள் தடுத்துக்கொண்டு
மனதில் இடைவிடாத சாரல்களை பொழிந்து
முகத்தை நிமிர்த்தி கன்களை விரித்து
பிரமிக்கவைக்கையில்..!
இலையின் நுனியில் தேங்கியிருந்த வெள்ளத் துளிகள்
தொப்பென்று தலையில் விழுந்து
வகுப்பறையை நினைவுப்படுத்தின..!

2 comments:

  1. nice post:) hope u ll come up wit more such posts..blog template is also good..simple n formal:)

    ReplyDelete
  2. un sindhayil ootredutha karpanai thuligal vellamai peruga,
    athil moozhga thudikum idhayathin vazhthukal...:)

    ReplyDelete